சென்னை: சென்னை எழும்பூர் 14வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுன் நீதிபதி பாலசுப்பிரமணியம் முன் கதறினார். காவல் துறையினர் தன் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக மீரா மிதுன் வாதம் செய்தார். எழும்பூர் காவல்துறையினர் இந்த வழக்குகள் குறித்து முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனவும் தன் சார்பாக வாதாட வழக்கறிஞர் வரவில்லை எனவும் மீரா மிதுன்குற்றம் சாட்டினார்.